கூக்குரல் கேட்டு ஓடிய காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட ஆச்சரியம்

அமெரிக்கா: காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட ஆச்சரியம்... அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் கூக்குரல் ஒன்றை கேட்டு பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற ஓடிய காவல்துறை அதிகாரிகள், அங்கு உண்மையில் ஒரு ஆடு கத்திக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

ஓக்லஹோமாவின் எனிட் காவல் துறையை சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகள் கேட்டனர்.

தொடர்ந்து வயல்வெளி வழியாக உதவிக்கான குரல் கேட்ட திசையை நோக்கி ஓடிச் சென்ற போது, இறுதியில் அங்கு ஆடு ஒன்றை கண்டனர்.

காவல்துறை அதிகாரிகளின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகளை, எனிட் காவல்துறை, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.