நாளை மும்பையில் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

புதுடில்லி: ஒலிம்பிக் கமிட்டி அமர்வு... 141 வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வை பிரதமர் மோடி மும்பையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாச் மற்றும் இதர உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இந்தியாவின் முக்கியமான விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு அமைப்புகள், மற்றும் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த அமர்வை இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது.