ரயில்வே பயணிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே திணைக்களம்

கொழும்பு: ரயில்வே திணைக்களம் தகவல்... கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 05 மாதங்கள் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.