இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள் அக்டோபர் மாதத்தில் நிறைவடையும்

கொழும்பு: மறு சீரமைப்பு பணிகள் வரும் அக்டோபருக்குள் முடியும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழியப்பட்ட காலவரையறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மே மாத இறுதிக்குள் புதிய மின்சார சட்ட மூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.