கோவில் நிலம் கண்டறிந்து கல்தூண் அமைக்கும் பணி

கோவில் நிலம் கண்டறியும் பணி... வல்லம் பகுதியில், கருப்பத்தூர் சிம்மபுரிஸ்வரர் சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து கல் தூண் அமைக்கும் பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் தாலுகா, வல்லம் கிராமத்தில் கருப்பத்தூர் சிம்மபுரிஸ்வரர் சிவன் கோவிலுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. கோவில் நிர்வாகம் வரிவசூல் செய்து வருகிறது.

இந்த நிலையில், கோவில் நிலத்தை சுற்றி ஆக்கிரமிப்பு இருப்பதால் நிலத்தை சுற்றி எல்லை வரையறை பணி செய்வதற்காக இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் சிவபிரகாஷ் தலைமையில் பணி நடந்தது.

இதில் கோவில் நிலம் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்ததால் அதனை எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் எல்லையை கண்டறிந்து கல் தூண் நடும் பணி, பொக்லைன் இயந்திரம் மூலம் நடந்தது. வருவாய்த்துறையினர், லாலாப்பேட்டை போலீசார் உடனிருந்தனர்.