கொரோனா அதிகரிப்புக்கு இதுதான் காரணம்; அதிபர் டிரம்ப் விளக்கம்

கொரோனா அதிகரிக்க என்ன காரணம் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் விளக்கம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இன மற்றும் நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்களால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், போலீசுக்கு எதிராகவும், இனபாகுபாடுக்கு எதிராகவும் போராட்டம் நடத்திய பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

விடுமுறை நாட்கள், பார்கள், கடற்கரைகளில் மக்கள் அதிகம் கூடியதும் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிகோவும் நோய் பரவலுக்கான காரணிகள் என்று அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.