பள்ளி மாணவர்களுக்கான இந்த கல்வி ஆண்டிற்கான அனைத்து தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் பாடத்திட்டங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளின் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அதாவது, 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் அலகு தேர்வு வருகிற ஜூலை 21 முதல் ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 6 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவநிலை தேர்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் அலகுத் தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கான அனைத்து தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.