இன்று நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி :தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் தான் மாணவர்கள் நேரடியாக வழக்கம் போல், ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பள்ளிக்கு செல்கின்றனர். இடைப்பருவ தேர்வுகள் நடந்து முடிந்து இந்த மாதத்தின் இறுதியில் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளது.

இதை அடுத்து இந்த நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. எனவே இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்த எச்சரிக்கையின் படி தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்துகொண்டு வருகிறது. இதனால் சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

எனவே, மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு செப்டம்பர் 13ம் தேதியான இன்று மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.