குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்..

தமிழ்நாடு: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்து அருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இங்கு வெகு நாளாக தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் வறண்டு காணப்பட்டன.

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் போனது. இதற்கு இடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது உள்ளதால் மீண்டும் சுற்றுள்ள பயணிகள் குவிந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நீர் வரத்து அதிகமானதால் மக்கள் அங்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.