ஆலப்புழா படகுப் போட்டியில் விபரீதம்... படகு கவிழ்ந்து பெண்கள் தண்ணீரில் தத்தளித்து மீட்பு

ஆலப்புழா: பாம்பு படகுப் போட்டியின் போது பெண்கள் படகு கவிழ்ந்தது. இதனால் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய 25 பெண்கள் மீட்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பம்பா நதியில் நடைபெற்ற பாம்பு படகுப் போட்டியில் 25 பெண்கள் கொண்ட படகு திடீரென நீரில் கவிழ்ந்தது.

படகில் இருந்த 25 பெண்களும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நிலையில் இதர படகுகளில் இருந்தவர்கள் குதித்து அவர்களை கரையேற்றினர்.

ஆற்றில் மூழ்கிய பெண்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து அனைத்துப் படகுப் போட்டிகளும் நிறுத்தப்பட்டன