இந்த பகுதியில் செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம் முழு விவரம் உள்ளே

சென்னை: ரயில்களின் நேரம் மாற்றம் ..... தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.எனவே அதன்படி வரவிருக்கும் 2023 ஜனவரி 13 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் துவங்கப்படவுள்ளது.

இதையடுத்து மக்கள் இப்போது இருந்தே ரயில்கள் பயணிக்க முன்பதிவு செய்ய துவங்கி விட்டனர். பண்டிகை நெருங்கும் நேரத்தில் முன்பதிவு இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மற்றும் கரூர் வழியாக இயக்கப்படும்

ரயில் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அவ்வப்போது ரயில்கள் மற்றும் அவை தண்டவாளங்களில் ரயில்வே துறை சார்பாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பராமரிப்பு பணிகள் காரணமாக வழக்கமாக செல்லும் ரயில்களின் நேரம் மற்றும் பாதை மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் இன்று கோவை வாஞ்சிபாளையம் – சோமனூர், சாமல்பட்டி – தசம்பட்டி – தாதம்பட்டி, குளித்தலை – பேட்டை வாய்த்தலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை,கரூர் வழியாக இயங்கும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.