அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் ... உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அமைச்சர் ஆனார் உதயநிதி .... ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது. இதனை அடுத்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

எனவே அதன்படி திமுக இளைஞரணி செயலாளரும், முதல்-அமைச்சரின் மகனுமான உதயநிதி அவர்களுக்கு அமைச்சரவையில் தற்போது இடமளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில், நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று கொண்டார்.

இதையடுத்து அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் செய்து வைத்தார். 'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல்-அமைச்சர் குடும்பத்தினர் பங்கேற்றனர்.