வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையேற்றம் .. ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெறுக .. உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்து ஒரு சிலிண்டர் 1898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இத்திடீர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,


“வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என்று சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத GST - பணமதிப்பு நீக்கம் - கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்து உள்ளது. இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.