மாணவர்களுக்கான 3-ம் அலகுத் தேர்வு வரும் நவம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது

சென்னை : அலகுத் தேர்வு வருகிற நவ. 3-ம் தேதி முதல் தொடக்கம் ... சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.மார்ஸ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து விதமான பள்ளிகளிலும்10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் அலகுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த அலகுத் தேர்வு நவம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதனை அடுத்து இந்த தேர்வுக்கான கால அட்டவணை தற்போது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதை பின்பற்றி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் செயல்பட வேண்டும்.

மேலும், இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.