தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கை காவிரியில் கர்நாடக அரசு திறக்க வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கை காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கேட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தியதாக கூறினார்.

ஜூன் மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 12.23 டிஎம்சி தண்ணீரில் கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி மட்டுமே வழங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.