முன்னாள் சபாநாயகரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

கொழும்பு: முன்னாள் சபாநாயகருடன் சந்திப்பு... இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். இதில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதையில் நல்லாட்சி மற்றும் வெளிப்படைதன்மையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முதல்வருடன் சந்திப்பு: இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனையும், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனையும் சந்தித்துள்ளார். இதன்போது யாழ் மாநகர சபை அலுவலகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.