தமிழர்களின் இந்திய அடையாளம் அழிவுற்றதே...முன்னாள் நீதிபதி மறைவு குறித்து வைரமுத்து

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமண் உடல் தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்த இவர், பொது இடத்தில் புகை பிடிக்க தடை உள்பட பல பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியவர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் மறைவு குறித்து கவியரசர் வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக ஒரு கவிதை எழுதியுள்ளார்.

அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது:-

நீதியரசர்
ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே!

நீதிமன்றத்தின்
நெடுந்தூண் சாய்ந்ததே!

தமிழர்களின்
இந்திய அடையாளம் அழிவுற்றதே!

கலைஞர் வெளியிடக்
கருவாச்சி காவியம்
முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே!

இனி எங்கு பெறுவோம்
அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!

அனைவர்க்கும்
என் அழுகை இரங்கல்

கவியரசர் வைரமுத்துவின் இந்த கவிதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.