நியூயார்க்கில் காந்தி சிலை சேதம்… இந்திய தூதரகம் கடும் கண்டனம்

நியூயார்க்: இந்திய தூதரகம் கடும் கண்டனம்... அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மஹாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹிந்து கோயில் முன்பு இருந்த மஹாத்மா காந்தி சிலையை மர்ம நபர் ஒருவர் சுத்தியல் மூலம் சேதப்படுத்தி தலைப்பகுதியை துண்டித்தார். பின்னர் வந்த 6 பேர் கும்பல் சிலையை நொறுக்கி அதனை மிதித்தனர். இவை அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை வெறுப்பை ஏற்படுத்தும் குற்றமாக கருதி நியூயார்க் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளது.

இந்த சிலை மீது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.