வெளி மாநிலத்தவர்களை பணிக்கு அமர்த்த மாட்டோம்... டாடா நிறுவனம் அளித்த உறுதி

கிருஷ்ணகிரி: டாடா நிறுவனம் உறுதி... வெளி மாநில ஆட்களை பணிக்கு அமர்த்த மாட்டோம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 69 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வெளிமாநில ஆட்களை பணிக்கு அமர்த்த மாட்டோம் என டாடா நிறுவனம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.