வலுக்கட்டாயமாக பெண்ணை கடத்திய இளைஞர் கைது

பெண் கடத்தல் குற்றச்சாட்டில் ரொறன்ரோ பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கனடாவில் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்ற குற்றச்சாட்டில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சந்தோஷ்குமார் செல்வராஜா என்ற 34 வயது நபர் Empringham Dr + Sewells Rd பகுதியில் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றார். இது தொடர்பாக பொலிசார்வெளியிட்ட அறிக்கையில், கடத்தப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்.

காயமடைந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இது தொடர்பில் சந்தோஷ்குமார் செல்வராஜாவை தேடி வருகிறோம். கடத்தல், ஆபத்தான வன்முறை உள்ளிட்ட வழக்கு தொடர்பில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து தேடப்பட்டு வந்த சந்தோஷ்குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.