பாலியல் ரீதியான துன்பத்திற்கு உள்ளாகாமல் இருக்க... பழகும் போதே கவனம் தேவை!

ஆணுக்குப் பெண் சமமான இந்தக் காலத்திலும் பெண்கள் பாலியல் ரீதியான துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாம் பழகிக் கொண்டிருக்கும் நபர்கள் திடீரென நமக்கு பாலியல் தொந்தரவுகளை தரத் தொடங்கினால் சில சமயங்ககளில் நமக்கு அதிர்ச்சி ஏற்படலாம். அது நமது உயர் அதிகாரியாக இருக்கலாம் உறவினராக இருக்கலாம் இதனால் நமது வாழ்வாதாரமோ வாழ்க்கையோ பாதிக்கப்படலாம் என்று வரும்போது அதனை எதிர்கொள்ள முடியாமல் பல பெண்கள் வேலையை விடுகின்றனர், அல்லது தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இவையெல்லாம் மன ரீதியாகப் பெண்களை பாதிக்கிறது. யாரோ ஒரு ஆணின் ஆசை நம் நிம்மதியை ஏன் குலைக்க வேண்டும். எனவே நாம் பழகும்போதே அந்த நபர் சரியானவரா தவறானவரா என்பதை அறிந்து கொண்டால் எதனையும் இழக்காமல் நீங்கள் நிம்மதியாக உங்கள் வாழ்க்கையைத் தொடர முடியும்

முகநூலின் உங்களோடு நட்பாக இருப்பவர்களில் யாரெல்லாம் நல்லவர் யாரெல்லாம் பின்னாளில் உங்களுக்குத் தொந்தரவு போகிறவர் என்பதை சில விஷயங்கள் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். அடிக்கடி இன்பாக்சில் வந்து உங்களை பார்க்க வேண்டும், மிஸ் யு, உங்களிடம் இந்த விஷயம் பிடிக்கும் என்பதை லைக் யூ என்று கூறுவது போன்ற வார்த்தைகள் மூலம் அவர்கள் மனநிலையை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புவார்கள்.

இந்த சமயத்தில் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். உங்களோடு மட்டும் இல்லாமல் உங்கள் நண்பர்களோடும் இவர் இதைப் போன்றுதான் பேசுகிறாரா என்பதை நீங்கள் அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல அவருக்குப் பதில் கொடுங்கள். உங்கள் புன்னகை அழகு, உங்கள் உடை அழகு, உங்களைப் போன்ற பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்று கூறுபவர்களிடம் கண்டிப்பாக கவனமாக இருங்கள். நம்மைப் பற்றி நமக்குத் தெரியாததா?

மற்றொரு நபருக்கு அனுப்ப வேண்டிய குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்பி விட்டதாகக் கூறுவது வேறொரு பெண்ணின் பெயர் சொல்லி உங்களை அழைப்பது போன்ற வேலைகள் செய்பவரிடம் நீங்கள் பார்த்துதான் பேச வேண்டும். உங்கள் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள்தான் இங்கு அதிகமே தவிர உங்களை உண்மையாக நேசிப்பவர் அல்ல.

உங்கள் தனிமையை அவர்கள் நுகர்ந்து காத்திருப்பார்கள். சரியான சந்தர்ப்பம் வரும்போது அவர்கள் உங்களிடம் ஆறுதலாகப் பேசுவார்கள். உன்னைப் போல ஒரு நல்ல பெணணிற்கு இத்தனை துன்பமா. நான் பார்த்துக் கொள்கிறேன், நான் உதவுகிறேன் நாம் ஒன்றாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று கூறுவார்கள். அவர்களை நீங்கள் நம்பினால் அவர்கள் விரும்பியதை உங்கள் மூலமாக சாதித்துக் கொள்வார்கள்.

உங்கள் வாட்சப் குழுவோடு நீங்கள் விலகி விட்டாலும் உங்கள் என்னோடு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுபவர் மற்றும் விடாமல் வாட்சப் செய்பவர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் உங்களிடம் மட்டுமல்ல பல்வேறு நபர்களிடம் இப்படித்தான் செய்து யாரவது அகப்படுகிறார்களா என்று அலைவார்கள். சிலர் கொஞ்சலாக அல்லது உரிமையாகப் பேசுவார்கள். உங்களுக்கு ஹனி, டார்லிங் என்கிற பெயரில் அடிக்கடி கூப்பிடுவார்கள். ஆனால் அதில் தவறில்லை என்பது போல அவர்கள் செயல்கள் இருக்கும். இவர்களும் சரியான தருணத்திற்காக காத்திருக்கும் நபர்கள்தான்.

உங்களோடு பழகுபவர் உங்கள் அன்பிற்குரியவராகவே இருந்தாலும் இந்த விஷயத்தை செய்ய சொன்னால் செய்து விட வேண்டாம். உங்கள் பெயரை வேறொரு பெயராக தனது போனில் சேமிப்பது தன்னுடைய நண்பர்களிடம் வேறொரு பெயர் சொல்வது அல்லது உங்களிடம் அவரது உண்மைப் பெயரை மறைப்பது போன்ற பல விஷயங்களை இவர்கள் செய்வார்கள். உங்களையும் இதற்கு உடன்பட சொல்வார்கள். எப்போதும் அதனை செய்து விடாதீர்கள். கண்டிப்பாக இவர்களால் உங்கள் நிம்மதி மட்டுமல்ல வாழ்க்கையும் பாழாகும்.

நாம் பழகும்போதே இவற்றையெல்லாம் கவனித்து வந்தால் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பது உங்களுக்குத் தெரிந்து விடும். ஒருமுறைதான் இந்த வாழ்க்கை. யாரோ ஒருவருக்காக நாம் ஏன் நம் சந்தோஷங்களை அடகு வைக்க வேண்டும்?.