ஒரு குடும்பத்தை நல்ல முறையில் அமைப்பதற்கு ஆண்களை விட பெண்களே முக்கிய காரணம். பெண்களே உங்கள் இல்லறத்தை நல்லறமாக்கி வளம் பெற்று வாழ நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவற்றை தெரிந்துகொள்ளலாம் வாங்க!
ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்வது கண்டிப்பாக கூடாது. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடி, அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செய்ய வேண்டாம்.
அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகையோ அல்லது அவர்கள் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பும் வகையில் செயல்கள் செய்யாதிருக்க வேண்டும்.
பெண்களே... நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து, நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு, உங்கள் அங்கங்கள் தெரியும் வண்ணம் பவனி வருவதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் கையில் கைபேசி இருந்தால், அதன் எண்ணை முன் பின் அறிமுகம் இல்லாத ஆண்கள் கேட்கும்போது கொடுக்க கூடாது. நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவற விட்ட அழைப்பு) கொடுப்பது தவிர்க்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத ஆண்களுக்கு நீங்கள் தவறுதலாக அழைப்பை கொடுத்திருந்தால் நீங்கள் டயல் செய்த எண் தவறு என தெரிந்ததும் துண்டித்து விடுங்கள்.
ஆண் நண்பர்களோடும், எல்லா நண்பர்களோடும் பேசும்போது, அதிக நெருக்கமாக காதலிப்பது போல் பேசுவது, பழகுவது தவிர்க்க வேண்டியது அவசியம்.