இன்று மாலை தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு நடக்கிறது

ஆமதாபாத்: விளையாட்டு போட்டிகளின் முன்னோட்டம்... குஜராத் மாநிலத்தின் ஆமதாபாதில் உள்ள இகேஏ அரீனா டிரான்ஸ் ஸ்டேடியாவில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது.

கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன. அதன்பிறகு ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை, 36வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

9,000க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் இந்த வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.