கவாஸ்கரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா சர்மா

கவாஸ்கரின் கருத்துக்கு கடும் கண்டனம்... 13 வது ஐபிஎல் கிரிக்கெட்டின் செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி பீல்டிங்கில் செய்த தவறு பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து அடுத்து பேட்டிங்கிலும் கோலி மோசமாக ஆடி 1 ரன்னில் அவுட் ஆனார்.

கோலியின் ஆட்டத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த நிலையில் இந்தி வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர், விராட் கோலியை நக்கலாக விமர்சித்தார். மேலும் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவையும் கிண்டல் செய்தார்.

இதுகுறித்துப் அனுஷ்கா பதிலடி கொடுத்து தெரிவித்துள்ளதாவது: “மரியாதைக்குரிய கவாஸ்கர், உங்களது கருத்து அருவெறுக்கத்தக்க வகையில் உள்ளது. கணவரின் ஆட்டத்துக்காக மனைவியை குற்றம் சாட்டிய உங்கள் கருத்து குறித்து விளக்கம் வேண்டும்.

கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டை பற்றி வர்ணனை செய்யும் போது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீது மதிப்பு அளித்து வந்த நீங்கள் எங்களுக்கும் மரியாதை அளித்திருக்க வேண்டாமா? எனது கணவர் குறித்து விமர்சிக்க வேறு வாக்கியங்களைத் தவிர்த்து என் பெயரை ஏன் பயன்படுத்தினீர்கள் எனத் தெரியவில்லை.

2020 ஆம் ஆண்டில் இருந்தபோதிலும் இன்னும் எதுவும் மாறவில்லை. எப்போது எனது பெயர் கிரிக்கெட் விஷயங்களில் இழுக்கப்படுவது நிறுத்தப்படுமோ? உங்களுக்கு என சிறப்பான பெயர் உள்ளது. உங்களுடைய கருத்திற்குப் பின்னர் என் மனதில் உணர்ந்ததை கூறியுள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.