ஐஎஸ் எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியும் ஏ.டி.கே. மோகன் பகான் அணியும் பலப்பரீட்சை

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இன்று 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னையில் எப்.சி. அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சென்னை அணியில் ரகீம் அலி எஸ்மெல் கோன்கால்வ்ஸ், அனிரூத் தாபா போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஆனால் பலம் வாய்ந்த ஏ.டி.கே. மோகன் பகான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஏ.டி.கே.மோகன் பகான் அணி 7 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் தோல்வி ஒரு டிராவும் பெற்று 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

அந்த அணியில் நட்சத்திர வீரராக ராய் கிருஷ்ணா உள்ளார். அவர் இதுவரை 5 கோல் அடித்துள்ளார். அந்த அணி 6-வது வெற்றியை பெற்று முதலிடத்தில் முன்னேறும் முனைப்பில் உள்ளது. இதனால் இன்று ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.