சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் மாற்று வீரரை எடுக்காமல் உள்ளது - இர்பான் பதான்

ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனித்துவம் உண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான தொடர்களில் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே சுரேஷ் ரெய்னா விலகிவிட்டார். அவருக்கு மாற்று வீரரை சென்னை அணி தேர்வு செய்யவில்லை.

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு சென்னை அணி சற்று தடுமாற்றம் அடைந்துள்ளது. இதனால் அணி இன்னும் செட்டில் ஆகவில்லை. முதன்முறையாக இந்நிலையில் சென்னை அணியில் பார்ப்பதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார். முதல் போட்டிக்கு பின் அணி இன்னும் தோல்வியை அடைந்து வருகிறது.

இந்நிலையில் இர்பான் பதான் கூறுகையில், முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செட்டில் ஆகாத நிலையை நான் பார்க்கிறேன். சுரேஷ் ரெய்னா போட்டிக்கு முன்னதாகவே இந்தியா திரும்பியபோது, பிரச்சனையை சந்தித்தது. தற்போது வரை அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அணி கலவையில் ஏராளமான பிரச்சனை உள்ளது. 3-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா விளையாடினால், கூடுதலாக ஒரு பந்து வீச்சாளருடன் அவர்கள் விளையாட முடியும். தற்போது அவர்கள் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுகிறார்கள். கேதர் ஜாதவை பந்து வீச டோனி அனுமதிக்காததும் கவலைக்குரியது என்று கூறினார்.