குஜராத்தை தோற்கடித்து சென்னை அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது

சென்னை: இறுதி போட்டிக்குள் நுழைந்தது... ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய சென்னை அணி 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய குஜராத் அணி 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி இறுதிச் சுற்றை எட்டுவது 10-வது முறையாகும்.