டி20-ல் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய நடராஜனுக்கு பாராட்டு

தமிழக வீரருக்கு பாராட்டு... சர்வதேச டி 20 போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது:

'ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் சாஹல் களம் இறங்கி சிறப்பாக பந்து வீசினார். ஆடுகளம் அவருக்கு ஏற்றபடி சாதகமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான தொடக்கத்தை பார்க்கும்போது, தோற்கடித்து விடுவார்கள் என்று நினைத்தோம்.

டி20 எப்படி வேண்டுமென்றாலும் செல்லலாம். நாங்கள் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நடராஜனை பார்த்தால், அவரால் மிகப்பெரிய அளவில் மேம்பட முடியும் போல் தோன்றுகிறார். ஹர்திக் பாண்ட்யா கேட்ச் திருப்புமுனையாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.