வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் லைக்கா ஜப்னா கிங்ஸ்

கொழும்பு: லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி... லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரின் முதலாவது போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரின் முதலாவது போட்டி ஹம்பாந்தோட்டையில் Galle Gladiators அணிக்கும் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற்றது. போட்டியில் டாஸில் வெற்றிப் பெற்ற Galle Gladiators அணி பீல்டிங்கில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் பேட்டிங் யெ;த லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ரன்களை பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் சொய்ப் மலிக் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 30 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு பேட்டிங் செய்த Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ரன்களை எடுத்து தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.