சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த நிலையில், உடனடியாக அதில் இருந்து மீண்டு வருவோம் - அனில் கும்ப்ளே

13வது ஐபில் கிரிக்கெட் போட்டியில் 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 157 ரன்கள் எடுத்தது. 2-வது 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது, அணிக்கு கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது.

இரண்டு பந்திலும் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் போட்டி ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது. தற்போது, அடுத்த போட்டியில் விசயங்களை சரியாக செய்வோம் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில், நாங்கள் விளையாடிய விதம் மிகவும் பெருமையாக இருக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றிருக்கனும், துரதிருஷ்டவசமாக, சூப்பர் ஓவர் வரை சென்றுவிட்டது. சூப்பர் ஓவரில் குறைந்தது 10 முதல் 12 ரன்கள் தேவை. எங்களால் அதை எடுக்க முடியவில்லை. டெல்லி அணி சிறப்பாக விளையாடியது என்று கூறினார்.

மேலும் அவர், நாங்கள் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டோம். ஆனால், தொடரின் முதல் போட்டி என்பதால் விளையாடிய விதம் திருப்தி அளிக்கும் விதமாக இருந்தது. ஆடுகளத்தில் நாங்கள் செய்ய வேண்டிய சிறு சிறு விசயங்களை சரிசெய்து கொள்வோம் என்று கூறினார்.