சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணியிடம் தோல்வி கண்ட ஐதராபாத் அணி

சூப்பர் ஓவரில் தோற்றது... இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியிடம் சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

அபுதாபியில் நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களும், ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களும் எடுத்தன.

இரு அணிகளுமே சம அளவில் ரன் களை எடுத்ததால், சூப்பர் ஓவர் மூலம் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. ஐதராபாத் அணி 2 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்ததால், 3 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணி களமிறங்கியது.

முடிவில் 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி, கொல்கத்தா அணி, புள்ளிகள் பட்டியலில் 4- ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.