அமீரகத்திற்கு 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்த ரோகித் சர்மா

13-வது ஐபில் போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டி அளித்தபோது, 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் போது பேட்டிங்கில் அதிகமான அதிரடி காட்ட வேண்டியது அவசியமாகும். இதே போல் புதுமையான ஷாட்டுகளை அடிப்பதற்கு நிறைய பயிற்சியும் தேவை என்று கூறியுள்ளார்.

ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் போட்டிகளின் போது எனது பேட் ஒன்று அல்லது 2 மாதங்கள் தாக்குப்பிடிக்கும். ஆனால் தற்போதைய கடினமான காலக்கட்டத்தில் கொரியர் சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக அமீரகம் புறப்பட்ட போது, கிட்டத்தட்ட 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் மற்றும் வெளியில் இருக்கும் வீரர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்குள் உணரச் செய்யும் வகையில் கேப்டன் பேச வேண்டும். இது ரிக்கிபாண்டிங்கிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறை விளையாடியுள்ளது. இதில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஐபில் போட்டியில் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், இந்த முறை ஐபில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.