ஐபிஎல் தொடரில் 5500 ரன்களை கடந்து சாதனை படைத்த விராட் கோலி

சாதனை படைத்த விராட் கோலி... ஐபிஎல் தொடரில் 5500 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.

பெங்களூரு - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்த தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 14, 1, 3 என மொத்தம் 18 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

ஆனால் இந்தப் போட்டியில் 53 பந்துகளில் 72 ரன்களை அடித்தார். இந்தத் தொடரில் இது அவருக்கு முதல் அரை சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 5,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 5502 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோலி. இவர் இந்த சாதனையை 181 போட்டிகளில் செய்துள்ளார். விராட் கோலியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 5368 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.