2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கம்பீரமான தூங்கா நகரம் மதுரை

மதுரை: 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை இந்தியாவின் தொன்மையான நகரங்களுள் ஒன்றான மிகவும் பழமையானது. மதுரை, வைகை ஆற்றங்கரையில் அழகிய சுற்றுப் புறத்துடன் கூடிய அமைப்பில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் 44வது மிகப் பெரிய நகரமும் ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முன்பே உருவான மதுரை, அறிஞர்கள் பலர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடமாகும்.

சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக ராஜ்ஜியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.

மதுரை மாநகரமானது இரவிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் தூங்கா நகரம் எனும் பெயரால் அறியப்படுகிறது. மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. இங்கு கிடைக்கும் ஜிகர்தண்டா எனும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.

மதுரையின் மிக முக்கியமான அம்சம் மீனாட்சி அம்மன் கோவில் ஆகும். பார்வதி அம்மனுக்குரிய கோவில் மீனாட்சி எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் அதிசயங்களில் ஒன்றாக இதன் கட்டிடக் கலைக்காகவே இந்த கோவிலைச் சேர்க்கவேண்டும். இந்த கோவிலின் முதன்மை கடவுள் சுந்தரேஸ்வரர் ஆவார். மீனாட்சி அம்மன் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி பி 1636ம் ஆண்டு திருமலை நாயக்கர் அரண்மனை பொக்கிஷத்தைக் கட்டியுள்ளார். இந்தோ சரசனிக் கட்டிடக் கலை வடிவமைப்பில் இத்தாலிய கட்டிடக் கலைஞர் ஒருவரால் இது கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவில் 248 பிரம்மாண்ட கோபுரங்களைக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது. 1971ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் சுற்றுலா வளர்ச்சிக்காக ஒலி ஒளி காட்சிகள் அமைக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.