சபரிமலைக்கு கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க திட்டம்

கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், தற்போது அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பேசிய தேவசம்போர்டு தலைவர் வாசு, வேலை நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களையும், வார விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களையும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

பக்தர்கள் வருகை குறைந்ததன் காரணமாக கோவிலில் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசை வலியுறுத்தி வந்தது.

அதனை பரிசீலனை செய்த கேரள அரசு சபரிமலையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.