வரும் 13ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அறிவிப்பு ..அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் மக்கள் பலர் வெளி ஊர்களுக்கு அதிகம் பயணம் செய்வார்கள். அதனால் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே இயங்கி வரும் பேருந்துகளை விட கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிவிப்பு வெளியிடும்.

அந்த வகையில் வரும் 13ம் தேதி மகாளய அமாவாசை, அதனால் பெருபான்மையான மக்கள் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அதன் படி வருகிற 13 ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, பெங்களூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.