இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்வு

சென்னை: கிடு கிடுவென ஏறும் தங்கம் விலை ..... மக்கள் மத்தியில் எவ்வளவு விலை விற்றாலும் தங்கத்தின் மோகம் குறையாமல் இருக்கிறது. மேலும் எந்த நாட்டிற்கு சென்றாலும் தங்கத்தை எளிதாக விற்று பணமாக்கி கொள்ளலாம்.

அதே போன்று தென் இந்தியாவில் தங்கம் அதிகம் வைத்துள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தங்கத்தை வெறும் பொருளாக பார்க்காமல் அதனை சொத்தாக தமிழக மக்கள் பார்க்கின்றனர். அதனால் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய (மார்ச் 10) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ. 41,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.5,190க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.67.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.