அதிரடியாக உயர்ந்த தங்கம்

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு .... தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை தங்கத்தின் மீது தான் அதிக முதலீடுகளை செய்து கொண்டு வருகின்றனர்.

இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை அடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து 4வது நாளாக சரிந்து வந்த நிலையில் இன்று அதிரடி உயர்வை கண்டுள்ளது.

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4, 896 என விற்பனை ஆன நிலையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து 4, 931 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,168 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. 39,448-க்கு விற்பனையாகிறது.

மேலும் அதேபோன்று வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்து கிராமுக்கு ரூ.68.20 எனவும், ஒரு கிலோ ரூ.68,200 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.