தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது

சென்னை: சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 45,160 க்கு விற்பனை .... தங்கம் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. அதன்படி மே மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.46 ஆயிரம் என்கிற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனையே இருந்து வந்த தங்கம் விலை, அண்மைக்காலமாக சற்று சரிவை சந்தித்து வந்தது.

இதையடுத்து அதன்படி கடந்த மே 26-ம் தேதி சவரன் 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையானது. அன்றைய தினம் 1 சவரன் 44 ஆயிரத்து 840 ரூபாயாகவும் , ஒரு கிராம் ரூ.5,605 ஆகவும் விற்கப்படுகிறது. அதன் பின் மெல்ல மெல்ல விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்தவகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.45,160க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.5,645க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து , 1 கிராம் ரூ.76.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது