தங்கத்தின் தேவை அதிகரிப்பால் விலை உயர்வு!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த அச்சம் நிலவி வருகிறது.

தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 447 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 576க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 37352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் 60 பைசா உயர்ந்துள்ளது. அதன் காரணமாக ஒரு கிராம் 53.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.