தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து கொண்டு வருகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.160 அதிரடியாக அதிகரித்தது.

அதனையடுத்து கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,500க்கும், ஒரு சவரன் ரூ.44,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு உள்ளது.

அந்தவகையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. எனவே அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 30 அதிகரித்துஒரு கிராம் ரூ.5,530க்கும், ஒரு சவரன் ரூ.44,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று சில்லறை விற்பனையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.80.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80.70 காசுகளுக்கு விற்பனையாகிறது.