தங்கத்தின் விலை இன்று சரிவு

சென்னை: தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் தங்கத்தின் விலையானது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து கொண்டு வருகிறது. இந்த ஆபரணத்தங்கத்தின் விலை தினசரி பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் 40,000 – ஐ தாண்டி விட்டது.

தற்போது தமிழகத்தில் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வரவுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் புது நகைகள் வாங்க திட்டமிடுவர். இந்நேரத்தில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூபாய் 41, 896 க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் அதே போன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 23 குறைந்து 5, 237க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இன்று ஒரு கிராம் வெள்ளி 120 காசுகள் குறைந்து ரூபாய் 73.70 விற்பனையாகி வருகிறது.