தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது ... தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து கொண்டு வருகிறது. தொடர்ந்து விலை உயர்வதும், திடீரென விலை குறைவதுமாக தங்கம் விலை போக்குகாட்டி கொண்டு வருகிறது.

எனினும் இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160 அதிரடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.240 அதிகரித்து 1 கிராம் ரூ.5,530க்கும், 1 சவரன் ரூ.44,240க்கும் விற்பனையானது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. எனவே அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து 1 கிராம் ரூ.5,545க்கும், 1 சவரன் ரூ.44,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று சில்லறை விற்பனையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ரூ.80.70க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.80.70 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.