வாரத்தின் தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கத்தின் விலை

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனை ...இந்தியாவில் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தங்க அணிகலன்கள் முக்கிய இடத்தை பிடித்து கொண்டு வருகிறது.

இதையடுத்து பெரும்பாலும் பெண்கள் மற்றும் நகை பிரியர்கள் நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக இன்று (நவ.20) காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது 1 சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து உள்ளது

இதனையடுத்து ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 45, 640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,705 -க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது.

அதனை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.79.00 -க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 க்கு விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.