திடீரென உச்சம் தொட்ட தங்கம்


சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென உச்சம் தொட்டுள்ளது.தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இதையடுத்து பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென உயந்துள்ளதால் நகை பிரியர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.360 அதிகரித்து ரூ.44,480 க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.5,560க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று, 1 கிராம் வெள்ளியின் விலை ரூ. 1 அதிகரித்து ரூ.78க்கும், கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.44,120க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,515க்கும் விற்பனையானது. அதேபோன்று , ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.