சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ;உயர்ந்த கொண்டே வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று கிராம் 4,805 ஆக இருந்த தங்கம் இன்று 4,815-க்கு விற்கப்படுகிறது. பவுன் ரூ.38 ஆயிரத்து 440-ல் இருந்து ரூ.38 ஆயிரத்து 520 ஆக உயர்ந்து உள்ளது.

ஒரேநாளில் தங்கத்தின் விலை கிராம் ரூ 10-ம் பவுன் ரூ.80-ம் அதிகரித்து இருக்கிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர தொடங்கி உள்ளது. கிராம் ரூ.62.30-ல் இருந்து ரூ.63.70 ஆகவும் ஒரு கிலோ ரூ.62 ஆயிரத்து 300-ல் இருந்து ரூ.63 ஆயிரத்து 700 ஆகவும் அதிகரித்து உள்ளது.

மேலும் முகூர்த்த மாதமான ஆவணி நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.