சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி உயர்ந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்தது.

கடந்த ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.256, ரூ. 304 என உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று காலை நேர நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,560–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.4,820-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்து, ரூ.63.60-க்கும், ஒரு கிலோ 63,600-க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலையானது உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள், பெண்கள் மற்றும் திருமணத்திற்கு நகைகள் வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.