சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தங்க விலை உயர்ந்து தான் வருகிறது. ஆடி மாதம் தங்க விலை குறையும் அப்போது நகை வாங்கலாம் என்று எதிர்பார்த்து கொண்டு மக்கள் இருந்து வந்த நிலையில், தங்க விலை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து கொண்டு வருகிறது.

இதை அடுத்து இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்ந்துள்ளது. ரூ. 37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது, ரூ .4,728- க்கு விற்பனை ஆகிறது.

மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்துள்ளது.ரூ. 60. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.