சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.
இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாயும்,
சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின்
விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 37,600 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது.
இதேபோல் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 4,700
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 60.70
ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 60700 ரூபாய்க்கு
விற்பனை செய்யப்படுகிறது.