சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும்
குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 45ரூபாயும், சவரனுக்கு 360 ரூபாயும்
குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை
சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஒரு கிராம் 45 ரூபாய் குறைந்து, 4,690 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளி
கிராமுக்கு ஒரு ரூபாய் 80 பைசா குறைந்து, ரூ.60.50 ஆகவும், கிலோவுக்கு
1,800 ரூபாய் சரிந்து, ரூ.60,500 ஆகவும் விற்கப்படுகிறது.